பக்கங்கள்

26 டிசம்பர் 2016

சுனாமி நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இன்று சுனாமி நினைவுத் தூபி திறந்தவைக்கப்பட்டு, குறித்த இடத்தில் மத வழிபாடுகளும் மலர் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன. சுனாமி பேரலையில் சிக்கி உயிர்நீத்தோரின் நினைவாக அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, யுத்த காலத்தில் படையினரால் அழிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் ஏற்பாட்டில் புதிதாக தூபி அமைக்கப்பட்டு, சுனாமி ஏற்பட்டு 12 வருட நினைவுதினமான இன்று திறந்து வைக்கப்பட்டது. சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள குறித்த இடத்தில், இன்றைய தினம் அவர்களது உறவுகள் மலரஞ்சலி செலுத்தினர். இந் நினைவு நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.