பக்கங்கள்

21 மே 2016

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் கொடியேற்றம்!

புளியங்கூடல் செருத்தனைப்பதி ஸ்ரீ இராஜமகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 10.06.2016 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி பதினெட்டு தினங்கள் விழா பெரும் பக்தி நயத்துடன் இடம்பெறவுள்ளது.கொடியேற்றத்திற்கு முதல் தினமான 09.06.2016 வியாழக்கிழமை விநாயகர் வழிபாடும்,கிராமசாந்தியும் இடம் பெறும்.அதைத்தொடர்ந்து மறுநாள் வெள்ளிக்கிழமை 10.06.2016 அன்று காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 18 தினங்கள் விழா சிறப்புற நடைபெறும்.14ம் திருவிழாவாகிய 23.06.2016 வியாழக்கிழமை வேட்டைத்திருவிழாவும்,16ம் திருவிழாவாகிய 25.06.2016 சனிக்கிழமை காலை 08:00 மணிக்கு இரதபவனியும்,26.06.2016 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவமும் இடம்பெற்று 18ம் திருவிழாவாகிய மறுநாள் 27.06.2016 திங்கட்கிழமை பூங்காவனத்திருவிழாவுடன் ஆலய வருடாந்த மகோற்சவம் இனிதே நிறைவுறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.