பக்கங்கள்

03 மே 2016

நாம் தமிழர்,பாமக இரண்டுமே இனி பிரதான கட்சிகள்!

தமிழகத்தின் தேர்தல் களம் மிகவும் சூடு பிடித்துள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டுமே தமிழக மக்களை ஏமாற்றி ஊழல் புரிந்து ஆட்சி செய்து வந்த கட்சிகள்.இன்றுவரை இவை இரண்டு கட்சிகளையுமே பிரதான கட்சிகள் என ஊடகங்கள் பறைசாற்றி நிற்கின்றன.ஆனாலும் இன்று தமிழக மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துவரும் கட்சிகளாக நாம் தமிழர் கட்சியும்,பாட்டாளி மக்கள் கட்சியும் நோக்கப்படுகின்றன.அதற்கான காரணம் யாதெனில்,அவை இரண்டும்தான் உண்மையான தமிழ்க்கட்சிகள் ஆகும்.திராவிடக்கட்சிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டுள்ள மற்றைய கட்சிகளை தமிழக மக்கள் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை என்பதே உண்மை.ஊழல் கட்சிகளான இரண்டு திராவிடக் கட்சிகளில் ஏதாவது ஒன்றை மீண்டும் ஆட்சியில் அமரவைத்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன தமிழகத்தில் இருந்து வெளிவரும் சில ஊடகங்கள்.உட்கட்சி மோதல்களாலும்,வாக்காளர்கள் மீதான மக்களின் எதிர்ப்பினாலும் திணறிக் கொண்டிருக்கின்ற இந்த திராவிடக்கட்சிகள் எப்படியாவது வென்று விடவேண்டும் என்ற அவாவில் பல வழிகளிலும் முயன்றுகொண்டிருக்க,தமிழக மக்களின் மனங்களை வென்று வருகின்ற நாம் தமிழர் கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் தமிழகத்தின் இரு பிரதான கட்சிகள் என்ற இடத்தை பிடிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.