பக்கங்கள்

12 மே 2016

மைத்திரிக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

மைத்திரிபால சிறிசேனவின் பிரித்தானிய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் நேற்று பிரித்தானிய தமிழர் பேரவை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. லண்டனில் அமைந்துள்ள பொதுநலவாய அலுவலகத்திற்கு முன்பாக நேற்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி இந்த போராட்டம் நடைபெற்றது. இறுதிக்கட்ட போரின் இறுதி ஐந்து மாதங்களில் 70 ஆயிரம் தமிழ் மக்கள் படையினரால் படுகொலை செய்யப்பட்டமைக்கு முன்னாள் மஹிந்த ராஜபக்ச மாத்திரமன்றி போரின் இறுதி நாட்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பொறுப்புக்கூற வேண்டுமென பிரித்தானிய தமிழர் பேரவை கூறுகிறது. யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் தற்போதைய அரசாங்கமும், தமிழர்களுக்கான உரிய தீர்வுத் திட்டங்களையோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதியையோ வழங்க மறுத்துவருவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. புதிய அரசாங்கமும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கும் பிரித்தானிய தமிழர் பேரவை அதனாலேயே அவற்றுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.