பக்கங்கள்

09 செப்டம்பர் 2019

யாழில் சஜித்தும் கூட்டமைப்பும் சந்திப்பு!

யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோரும், சஜித் பிரேமதாசவுடன் அமைச்சர் எரான் விக்ரமரத்தினவும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில் என்ன விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதென இதுவரை எந்தவொரு தகவல்களும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.