பக்கங்கள்

23 செப்டம்பர் 2019

மறு பிறப்பில் கூட ராஜபக்சக்கள் இருக்கும் இடத்தில் பிறந்து விடக்கூடாது!

கொள்ளையர்கள் மற்றும் கொலைக்காரர்களான ராஜபக்சவினரிடம் தான் ஒரு போதும் சரணடையப் போவதில்லை எனவும் மறு ஜென்மத்தில் கூட ராஜபக்சவினர் பிறக்கும் இடங்களில் பிறக்கக் கூடாது எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். அதேபோல தான் நன்றி கெட்ட ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் பெயரை உச்சரிக்க கூட விரும்பவில்லை எனவும் அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து தமக்கு அரசியலை தொடருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தால், அந்த கட்சிக்கு தாம் செய்த தவறுகளை உணர்ந்து அனைத்து தவறுகளையும் திருத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக இதை பயன் படுத்திக்கொள்வேன் எனவும்  தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.