பக்கங்கள்

17 மார்ச் 2018

தேசியத் தலைவரை படைவீரராக்கியது கூகிள்!

கூகுள் தேடு பொறியில இவ்வளவு காலமும் தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டிருந்த தமிழீழ தேசியத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் பெயரை இப்பொழுது படைவீரர் (Soldier) என்று மாற்றியுள்ளது. இது விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது. பொதுவாக கூகுளில் தீவிரவாதிகள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் அழிக்கப்படும். தேடு பொறியில் அவ்வாறான தகவல்கள் தரப்படமாட்டாது. அதையும் மீறி தகவல்களை அறியும் நோக்கில் தேடும் பட்சத்தில் தீவிரவாதி என்ற பதத்துடன் குறிப்பிடுவார்கள். இவ்வளவு காலமும் தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவரின் பெயர் தற்போது ராணுவ வீரர் அல்லது படைத் தலைவர் என்ற தலைப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இதனை Share செய்வதன் மூலம் அனைவருக்கும் உடனடியாக இந்த வெற்றியை தெரியப்படுத்துங்கள்.

நன்றி:அதிர்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.