32 பரப்பு நிலம் 12 இலட்சம் ரூபா கொள்வனவில், உதவி வைத்தியசாலை நம் ஊரில் அமைய உள்ளது.அதற்கான உங்கள் ஆதரவுக் கரம்பற்ற இப்பதிவை வரைகின்றோம்.
அன்பு உள்ளம் கொண்ட புளியங்கூடல் மண்ணின் உறவுகளே!புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எம் ஊரின் மீது அதீத பற்றுக்கொண்ட நம் உறவுகளே! உங்கள் அனுசரணை மூலம் பல சிறந்த விடயங்கள் நம் ஊரில் நடந்தேறியது அனைவரும் அறிந்த விடயமே. முன்பள்ளியின் சொந்தக் கட்டடம் முதல் ஆரம்பிக்க இருக்கும் அடுத்த பகுதிநேர வகுப்புக்களுக்கான ஓர் நிலையம், கட்டணம் இன்றிய பகுதிநேர வகுப்புக்கள் அனைத்தும் உங்கள் அனுசரணையில் நடைபெற்றுவருவதும், ஊர் உறவுகள் அனைவரும் அறிந்தவிடயமே!! பெருமை கொள்ளவேண்டிய விடயமும் கூட.
அதுபோல் இந்தப் பதிவும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஊர் மீது பற்றுவைத்த அனைவரின் மீதும் நம்பிக்கைவைத்து மேற்கொண்ட ஓர் சிறந்த விடயமே.
உங்கள் அனுசரணையை நாடிவரும் ஓர் பதிவே.
அனைவரும் ஊர் வளர்ச்சிக்காகவும், ஊர் மாணவர் கல்வி வளர்ச்சிக்காகவும் செய்யும் எந்த அனுசரணையும் வீணடிக்கப் படவில்லை. உங்கள் பங்களிப்பின் பலன்கள் சிறிது தாமதமானாலும் நடந்தேறும், பலன்பெறும் என்பதை நாம் உறுதியளிக்கின்றோம்.
தற்போது ஊர்காவற்றுறை அரச செயலகமும் அதன் அதிபரும் எங்கள் ஊரில் ஓர் உதவி வைத்திய நிலையம் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். அதற்கான காணியை ஊர் வளர்ச்சியில் உழைக்கும் புளியங்கூடல் சிறுவர் நல்வாழ்வு நிலையத்திடம் காணியை தரும்படி கேட்டிருந்தனர். அந்தச் சூழ்நிலையில் அவசரமாக காணியை வேண்ட வேண்டியதாகிவிட்டது.
காணி தரும் பட்சத்தில் உதவி வைத்தியசாலையை எங்கள் ஊரில் அமைப்பதாக உறுதி அளித்துள்ளார். முன்பு நாம் வாங்கிய காணியுடன் வேல் கோவில் ஐயாவின் அன்பளிப்பு காணியையும் சேர்த்து ஓர் நூல் நிலையம், மழலைகளுக்கான முன் பள்ளிக் கட்டிடமும்
அமைத்துள்ளமை அனைவரையும் மகிழவைக்கும் விடயமே.
ஒர் உதவி வைத்திய நிலையம் நம் ஊரில் அமைக்க அரச செயலகம் திட்டமிட்டிருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய விடயமே.அதற்காக புளியங்கூடல் சிறுவர் நல்வாழ்வு நிலையத்தின் ஐரோப்பிய நிர்வாக உறுப்பினர்கள், சில ஊர் நலன்விரும்பிகள் சிலர் சிந்தனைகளின் முயற்சிகளில் வேல் கோவில், நூல்நிலையத்தின் பின் பகுதியில் உள்ள 32 பரப்புக் காணியை 12,00,000(12இலட்சம் ரூபாய்) ரூபாய்களுக்கு வேண்டி உதவி வைத்தியசாலைக்கு 7 பரப்புக் காணியை அரச பணிமனைக்கு எழுத்து மூலம் கொடுத்துவிட்டனர். உதவி வைத்தியசாலை நம் ஊரில் அமையும் என்பது நம்பிக்கை.
அது போன்று நாம் கொள்வனவு செய்த இந்த மிகுதி நிலப்பரப்பால்
அம்மன் கோவில் பிள்ளையார் கோவில்களுக்கு இடையாக செல்லும் பாதையும் பல காலமாக இடையூறாக வாகனப் போக்கு வரத்து தடையாக உள்ளதும் அனைவரும் அறிந்த விடயமே. இதையையும் இணைக்கமுடியும், அதைவிட சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றம்( சிறுவர் பூங்கா) , ஓர் சிறந்த விளையாட்டு மைதானம், போதிய அளவிலான பகுதிநேர, கணணி வகுப்புக்களுக்கான கட்டிடங்கள் என்பனவற்றை இந்த நிலப்பரப்பில் உருவாக்க முடியும் உங்கள் அனுசரனையுடன். வேறு செயற்திட்டங்களுக்கும்
பயன்படுத்த முடியும்.
இப்போ இந்த நிலப்பரப்பை ஓர் உறவின் பணக் கடன் தொகையாக 7 இலட்சம் ரூபாய்களை பெற்று, அதை முற்பணமாக காணி உரிமையாளரிடம் கொடுத்து சிறுவர் நல்வாழ்வு நிலையத்தின் பெயரில் உறுதி எழுதப்பட்டுள்ளது.
மிகுதிப் பணம் 5 இலட்சம் ரூபாய்களும் 2 அல்லது 3 மாதங்களில் தருவதாக உறுதியளித்துள்ளோம்.
நம் ஊர் உறவுகள், ஊர் பிரிந்து வாழும் நம் உறவுகள் மீது கொண்ட திடமான நம்பிக்கையிலேயே இந்தத் தொகை பணத்தை கடனுதவி, கடன் நம்பிக்கை மூலம் இத்தகைய பிரமாண்டமான நிலப்பரப்பை கொள்முதல் செய்துள்ளோம்.
புளியங்கூடல் மண் பிறந்த, உருண்டு விளையாடிய, ஊர் காற்
றை உள் உணர்வாக சுவாசிக்கும் உறவுகளே. வாருங்கள் உங்கள் கடின உழைப்பின் ஓர் சிறு பகுதியை ஊருக்கும் கொடுத்து, ஊரையும் அந்த நம் உறவுகளையும் சிறப்பாக்குவோம்.
இந்த நிலப்பரப்பின் 12,00,000
உறுதி எழுத்துக்கூலி. 40,000ரூபா
மொத்தமாக 12,40,000ரூபாய்களை (12 இலட்சத்து 40ஆயிரம்)உறவுகளிடமிருந்து ஒன்றுசேர்க்க வேண்டுகின்றோம்.
அதே போன்று யாராவது மழலைகள் விளையாட்டு முற்றத்தை ( சிறுவர் பூங்கா) உங்கள் மறைந்த உறவுகள் நினைவாகவோ அல்லது உங்கள் பெயரின் அன்பளிப்பாகவோ அமைத்து வைக்கலாம். மழலைகள் மனதை சந்தோசப்படுத்த யாரும் முன்வரலாம்.
தொடர்புகளுக்கு:
சுவீஸ்:- தலைவர் திரு அ. தியாகராஜா
உப தலைவர் திரு பொ. சாந்தலிங்கம்
செயலாளர் திரு கோ. வசந்தராஜா
பொருளாளர் திரு கோ. தர்மசீலன்
ஐரோப்பிய இணைப்பாளர்கள்:
திரு கு.பாலசுப்பிரமணியம்
திரு சு.பேரின்பநாதன்
நன்றி:முருகேசு விஜயன்
(புளியங்கூடல் மாணவர் வளாகம்)
தொடர்புகளுக்கு:
சுவீஸ்:- தலைவர் திரு அ. தியாகராஜா
உப தலைவர் திரு பொ. சாந்தலிங்கம்
செயலாளர் திரு கோ. வசந்தராஜா
பொருளாளர் திரு கோ. தர்மசீலன்
ஐரோப்பிய இணைப்பாளர்கள்:
திரு கு.பாலசுப்பிரமணியம்
திரு சு.பேரின்பநாதன்
நன்றி:முருகேசு விஜயன்
(புளியங்கூடல் மாணவர் வளாகம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.