பக்கங்கள்

11 பிப்ரவரி 2017

எழுவைதீவில் முதலாவது கலப்பு மின் உற்பத்தித்திட்டம்!


இலங்கையின் முதலாவது கலப்பு மின் உற்பத்தி திட்டம்  எழுவைதீவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்கசக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டி இந்த மின் திட்டத்தை திறந்து வைத்துள்ளார். இந்த திட்டத்தின் ஊடாக காற்றலை சக்தி, சூரிய சக்தி மற்றும் எரிபொருளை பயன்படுத்தி 60 கிலோவோட் மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முதலாவது கலப்பு மின் உற்பத்தி திட்டம் எழுவைதீவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்கசக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டி இந்த மின் திட்டத்தை திறந்து வைத்துள்ளார். இந்த திட்டத்தின் ஊடாக காற்றலை சக்தி, சூரிய சக்தி மற்றும் எரிபொருளை பயன்படுத்தி 60 கிலோவோட் மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் நிதி உதவியுடன் இந்த மின்உற்பத்தி திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கதக்க சக்தியின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 187 மில்லியன் ரூபா செலவில் இந்த மின்உற்பத்தி திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஒரு அலகு மின்சாரத்தை 9 ரூபா 14 சதத்திற்கு உற்பத்தி செய்ய முடியும்.இவ்வாறு செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.