பக்கங்கள்

19 பிப்ரவரி 2017

சோபிகா கொலையுடன் தொடர்புடையவர் சுவிசில் கைது!


ஜேர்மனியின் Ahaus மாவட்டத்தில் சோபிகா (22) என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணைக்  கொலை செய்து விட்டு தலைமறைவாகியிருந்த நைஜீரியா அகதி சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் அகதிகள் செயற்பாட்டாளராகப் பணியாற்றிய போது, நைஜீரியா நாட்டை சேர்ந்த 27 வயதான அகதியுடன் நட்புடன் இருந்துள்ளார், அந்த நபர் சோபிகாவை பின் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜேர்மனியின் Ahaus மாவட்டத்தில் சோபிகா (22) என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணைக் கொலை செய்து விட்டு தலைமறைவாகியிருந்த நைஜீரியா அகதி சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் அகதிகள் செயற்பாட்டாளராகப் பணியாற்றிய போது, நைஜீரியா நாட்டை சேர்ந்த 27 வயதான அகதியுடன் நட்புடன் இருந்துள்ளார், அந்த நபர் சோபிகாவை பின் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.    இந்த நிலையில் சோபிகாவை மிரட்டிய அந்த நபர் ஒருகட்டத்தில் அவரை கழுத்து, தலை போன்ற பகுதியில் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்றுள்ளார்.அவர் மீது ஐரோப்பிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, சுவிஸ் பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என அறியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.