பக்கங்கள்

02 பிப்ரவரி 2016

தனித்தேசக் கொள்கையினை கைவிடப்போவதில்லை-கஜேந்திரகுமார்

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச பங்களிப்போ,ஒத்துழைப்போ,தலையீடோ இருக்காதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சர்களும் தெரிவித்து வருவதானது, பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அனைத்தும், அமெரிக்க, இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் தங்களின் பூகோள அரசியல் நிலைமையை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அன்றி, தமிழ் மக்களின் அடிப்படை நலன்களுக்காகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயங்களை பெற்றுக் கொடுப்பதற்காவும் அல்ல. பாதிக்கப்பட்ட மக்களே தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த காலத்தை போலல்லாது, நடக்கும் எல்லா விடயங்களையும் மக்கள் விமர்சன கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டியது அவசியம். தமிழர்களுக்கு தனித்தேசம் என்ற கொள்கையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் கைதுவிடாது. தமிழர்களுக்கு தனிதேசம் என்ற கொள்கையினை கைவிடுவதானது தமிழ் மக்களின் இருப்பிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விடயமாகும். இதன்காரணமாக நாம் ஒருபோதும் தமிழர்களுக்கு தனிதேசம் என்ற கொள்கையினை கைவிடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.