பக்கங்கள்

22 பிப்ரவரி 2016

கலப்புத்திருமணம் செய்துகொண்டால் கலப்பு நீதிமன்றம் தேவைப்படாது!

யாழில் ரெஜினோல்ட் கூரே
தமிழ் இனத்தை முற்றாக துடைத்தழிக்கும் திட்டத்துடன்தான் செயற்படுகிறது இன்று நல்லாட்சி அரசு எனக்கூறிக்கொள்ளும் சிங்கள பேரினவாத அரசு.முன்னைய மகிந்த அரசு கூறிய கலப்புத்திருமணக் கதையையே இப்போதைய மைத்திரி அரசும் ரெஜினோல்ட் கூரே மூலம் யாழில் சொல்ல வைத்திருக்கிறது.தமிழர்கள் மிகவும் மோசமான சூழ்நிலைக்குள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு வடக்கு கிழக்கு தொடங்கி மலையகம் வரை தமிழ் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படும் கொடூரங்களே போதுமானது.மர்ம மரணங்கள் இன்னும் தொடர்கிறது.புலனாய்வாளர்கள் தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்து வருவதாக காணாமல் போனோரின் உறவுகள் தெரிவிக்கிறார்கள்.கலப்பு நீதிமன்றத்தை எதிர்க்கும் சிங்கள இனவாதிகள் கலப்புத் திருமணம் பற்றிப்பேசி தமிழர் கலை கலாச்சாரங்கள் பண்பாட்டு விழுமியங்கள் யாவற்றையும் அழித்து விடலாம் என பகல் கனவு காண்கிறார்கள்.தந்திரச் செயற்பாடுகள் மூலம் உலக நாடுகளை ஏமாற்றி தாம் விரும்பும் திட்டங்களை நிறைவேற்றவே சிறீலங்கா அரசு முனைப்புக்காட்டி நிற்கிறது.மகிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து காப்பாற்றி விட்டோம் என்பதும் இராணுவத்தைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்பதும் இந்த பேரினவாதிகளிடமும் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது.இவர்களுக்கு துணை நிற்கும் தமிழ் அரசியல்வாதிகளை மக்கள் புரிந்து கொண்டு செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.