பக்கங்கள்

07 பிப்ரவரி 2016

வந்தார் பார்த்தார் நடக்கப்போவது என்ன?

பான் கீ மூன்
ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் சைத் அல் ஹுசைன் இலங்கை வந்திருக்கிறார்.அவர் பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்து பேசி வருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்திருக்கிறார்.இவரின் வருகை ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியிலே ஏற்பட்டிருக்கிறது.வன்னி பெரு நிலப்பரப்பின் மீது அரச படைகள் கடும் கொடூரத்தாக்குதலை
சைத் அல் ஹுசைன்
நடத்திக்கொண்டிருந்த வேளையில் அங்கிருந்து ஐ.நா.வெளியேறியது.பின்னர் பான் கீ மூன் அவர்கள் இலங்கை வந்து உலங்கு வானூர்தியில் இருந்துகொண்டு சிதைந்து போன தமிழர் பகுதிகளை பார்வையிட்டதுடன் வவுனியா மருத்துவமனைக்கும் சென்று காயப்பட்டவர்களையும் பார்வையிட்டுச் சென்றார்.ஆனாலும் தமிழ் மக்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.ஐ.நா.மனித உரிமை ஆணையாளராக நவநீதம்பிள்ளை அவர்கள் இருந்தபோது பெரும் நம்பிக்கையோடு தமிழ் மக்கள் இருந்தார்கள்.அவருக்குப்பின் மனித உரிமை ஆணையாளராக பொறுப்பேற்ற சைத் அல் ஹுசைன் அவர்களும் நவநீதம்பிள்ளை அவர்கள் விட்ட இடத்திலிருந்து தொடர்வார் என்ற நம்பிக்கை மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் இருந்தது.ஆனாலும் ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கியது.மனித குலத்திற்கு எதிரான பாரிய கொடூரங்களை புரிந்து கொலைத்தாண்டவம் ஆடிய சிறீலங்கா அரசே "உள்ளகப் பொறிமுறை மூலம் விசாரணைகளை மேற்கொள்ளலாம்"என்ற அந்த தீர்மானம் தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை செயலிழக்க வைத்தது.இப்போ இலங்கை வந்திருக்கும் ஆணையாளர் அவர்களால் என்ன மாற்றம்தான் நிகழ்ந்து விடப்போகிறது?அவர் ஏதாவது அழுத்தத்தை சிறீலங்கா அரசு மீது பிரயோகிப்பாரா?நீதி நிலை நாட்டப்படுமா?என்பதையெல்லாம் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.