பக்கங்கள்

18 நவம்பர் 2014

நெடுந்தீவிற்கான போக்கு வரத்து மழையால் பாதிப்பு!

கடும் மழை, கடல் கொந்தளிப்புக் காரணமாக நெடுந்தீவுக்கான போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் நெடுந்தீவு பயணசேவையில் ஈடுபடும் குமுதினிப் படகு இயந்திரக் கோளாறு காரணமாக சேவையில் ஈடுபடவில்லை. தனியார் படகுகளே சேவையில் ஈடுபட்டன. இந்நிலையில் இன்று கடும் மழையும் கடற்கொந்தளிப்பும் காணப்படுவதால் தனியார் படகுகள் சேவையில் ஈடுபடவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குமுதினி படகு இயந்திரக் கோளாறால் பயணசேவையில் ஈடுபட முடியாத நிலையில் தனியார் படகுகளும் மேல்கூரை இல்லாமையால் மழை பெய்யும்போது பயணத்தில் ஈடுபட முடியாத நிலையே காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.