பக்கங்கள்

12 நவம்பர் 2014

சரவணையில் மரநடுகை நிகழ்வு!

வடமாகாண விவசாய அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மரநடுகை மாதத்தை முன்னிட்டு, ஊர்காவற்றுறை, சரவணைப் பகுதியில் மரநடுகை விழாவும், மாணவர்களுக்கான மரக்கன்றுகளை விநியோகிக்கும் நிகழ்வும் நேற்று பி.ப 5 மணியளவில், நடைபெற்றது. திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கியதுடன் மர நடுகையிலும் ஈடுபட்டார். இந்நிகழ்வில் ஜெயபாலன், ஆசிரியர்கள் ஜஸ்ரின், டிஹால், மாணவர்கள் ஊர்ப் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.இந்தநிகழ்வினை நிறைவு செய்துவிட்டு மாகாணசபை உறுப்பினர் திரும்பிய பின் அப்பகுதிக்கு சென்ற வேலணைப் பிரதேச சபையின் தலைவரான ஈ.பி.டி.பியைச் சேர்ந்த சிவராசா (போல்), பிரதேச மக்களுடன், தம்மை நிகழ்வுக்கு அழைக்கவில்லை எனவும், கூட்டமைப்பினரை அழைத்து நிகழ்வு நடத்தியமை குறித்து மக்களுடன் முரண்பட்டுள்ளார். அத்துடன் அவர்களை அச்சுறுத்தியதுடன், மிரட்டும் பாணியில் செயற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.