பக்கங்கள்

16 அக்டோபர் 2016

புளியங்கூடலில் மதில் ஏறிப்பாய்ந்த காளை மாடு!

இன்று16.10.2016 ஞாயிற்று கிழமை மாலை புளியங்கூடல் பகுதியில் காளை மாடு ஒன்று மதில் ஏறி குதித்துள்ளது. அப்பகுதி கிராம அலுவலரும், கிராமத்தின் இளைஞர்களும் குறித்த காளை மாட்டை மடக்கி பிடிப்பதற்கு பெரும் பாடுபட்டுள்ளனர்.பாய்ச்சல் என்றால் அப்பிடி ஒரு பாய்ச்சல். வேலி என்ன மதிலை கூட விட்டு வைக்காமல் குறித்த காளை மாடு எகிறி குதித்து ஓடியுள்ளது. அப்போது ஒரு பெரியவர்'இந்த மாட்டை யாழ்ப்பாணத்திலிருந்து தேசிய மட்ட உயரம் பாய்தல் போட்டிக்கு தப்பாமல் அனுப்பி வைக்கலாம். நிச்சயம் தங்கப் பதக்கத்தோடு திரும்பி வரும்' என்று ஆருடம் சொன்னார்.எனவும் ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.இந்த வீரமிகு மாடடைப் பற்றி மக்கள் வியப்போடு பேசி வருவதுடன் அதன் சாகசக் காட்சியை முகநூல்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.