பக்கங்கள்

24 ஜூன் 2016

புளியங்கூடல் அம்பாள் ஆலய இரதோற்சவம் நாளை!

புளியங்கூடல் செருத்தனைப்பதியில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ இராஜ மகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 10ம் திகதி ஆரம்பித்து பக்தர்கள் புடைசூழ வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.நாளை(25.06.2016)சனிக்கிழமை மகாமாரி அம்பாள் இரதத்தில் அமர்ந்து வீதியுலா வரும் பெருவிழா காலை 8:00மணிக்கு ஆரம்பமாகி பக்தர்களின் ஆனந்தப் பெருவெள்ளத்தினூடே வெகு சிறப்பாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.அடியவர்தம் வேண்டுதல்களை அன்னை நிறைவேற்றிக் கொடுப்பதால் பல பகுதிகளில் இருந்தும் அடியவர்கள் வருகை தந்து அன்னையின் தேர்த்திருவிழாவிலே கலந்து தாயவளின் ஆசிகளை பெற்றுய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.