பக்கங்கள்

03 ஜூன் 2016

மதம் மாறிய மகளை அடித்துக்கொன்ற தாய்!

அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் 21 வயதுடைய மகளை அடித்து கொலைசெய்து வீட்டின் பின்னால் நிலத்தில் புதைத்த சம்பவம் தொடர்பாக அவரது தாயாரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக மத்தியமுகாம் பொலிசார் பொலிசார் தெரிவித்தனர். மத்தியமுகாம் 6ஆம் பிரிவு 11ஆம் கொலனியைச் சேர்ந்த 21 வயதுடைய செல்வநாயகம் ஜனனி என்பவரே இவ்வாறு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்டவர் திருமணம் முடித்து கணவனின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளதுடன் கணவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். இதனை உயிரிழந்தவரின் தாயார் கேள்விப்பட்டுள்ளார் சம்பவ தினமான கடந்த 31ஆம் திகதி இரவு உயிரிழந்தவர் தாயாரின் வீட்டிற்குச் சென்று அங்கு தங்கிவிட்டு வருவதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் தனியாக வாழ்ந்துவரும் தாயாருக்கும் மகளுக்கும் மதம் மாறியது தொடர்பாக வாய்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து தாயார் கட்டில் பலகையால் மகள் மீது தாக்கியதையடுத்து மகள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த மகளின் உடலை தூக்கிச் சென்று வீட்டின் பின்பகுதியில் உள்ள நிலத்தில் கிடங்குவெட்டி புதைத்துள்ளார். இதன் பின்னர் மகளை காணவில்லை என புரளியை கிளப்பிவிட்டுள்ள நிலையில் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து பொலிசார் நேற்று மாலை 5 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்று நடத்திய விசாரணையின்போது தாயார் தான் கொலை செய்து வீட்டின் பின்பகுதியில் புதைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. தாயாரை பொலிசார் கைதுசெய்துள்ளதுடன் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டுவதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதுவரை சடலம் புதைக்கப்பட்ட பகுதியில் பொலிசார் காவற்கடமையில் ஈடுபட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.