பக்கங்கள்

22 ஜூன் 2016

ஆசிரியர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் உதவாக்கரைகள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆசிரியர் தொடர்பில் வலையக் கல்விப்பணிமனை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் ஏழாம் வகுப்பில் கற்று வரும் மாணவிகள் சிலருடன் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டுள்ளார்.இந்தச்சம்பவம் தொடர்பாக அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் மாணவிகளின் பெற்றோரும் இணைந்து அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும்,அதிபர் இவ்விடயத்தை மறைக்க முயன்றதாக தெரியவருகிறது.இதையடுத்து அதிபருக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு தோன்றியுள்ளது.இதேவேளை இச்சம்பவம் குறித்து கல்விப்பணிப்பாளரும் நீதிமன்றமும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அண்மையில் வரணிப்பகுதியிலும் இத்தகையதொரு சம்பவம் இடம்பெற்றதும் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் அதிபர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.புலிகளின் ஆளுமை இருந்த காலங்களில் தமிழர் பகுதிகளில் நீதி நிர்வாகம் சிறந்த முறையில் விளங்கியது.பெண்கள் இரவு நேரங்களிலும் தன்னந்தனியாக நடமாட முடிந்தது.இன்று நல்லாட்சி என்ற பெயரில் கலாச்சார சீரழிவுகளே முடுக்கி விடப்பட்டுள்ளது.தமிழின அழிப்பும்,சிங்களக் குடியேற்றமும் தொடர்கதையாக உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.