பக்கங்கள்

19 ஜூன் 2016

நயினாதீவு கடலில் இளைஞர் மூவர் பலி!

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழாவுக்கு சென்ற இளைஞர் குழுவொன்று கடலில் நீராடிய போது, அதில் மூவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். நயினாதீவு தேர்த்திருவிழாவில் கலந்துகொள்ள சென்ற எட்டுப் பேர் கொண்ட இளைஞர் குழு அங்கு கடலில் நீராடியுள்ளது.அந்த எட்டுப் பேரும் நீர்ச்சுழியில் அகப்படுள்ளனர். இதில் ஐவர் காப்பாற்றப்பட்ட போதும் ஏனைய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த மூவரும் யாழ்ப்பாணம், கோண்டாவில் நாராயணன் கோயிலடியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.