பக்கங்கள்

09 ஏப்ரல் 2016

சிந்தாமணி பத்திரிக்கை ஸ்தாபகர் அமரர் சிவநாயகத்தின் பாரியார் காலமானார்!

எஸ்.டி.எஸ்ஸின் துணைவியார் காலமானார்பத்திரிகை உலகின் ஜாம்பவானும் 'தினபதி', 'சிந்தாமணி', 'சூடாமாணி', பத்திரிகைகளின் ஸ்தாபக ஆசிரியருமான அமரர் எஸ்.டி.சிவநாயகத்தின் துணைவியார் மங்களாவதி சிவநாயகம் தமது 88ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறும். எல்லோராலும் 'மங்களம் அக்கா' என அழைக்கப்பட்ட அவர் 35 வருட ஆசிரிய சேவைக்குப் பின்னர் கடைசியாக கொழும்பு விவேகானந்தாக் கல்லூரியில் இருந்து ஓய்வுபெற்றார். மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட மங்களம் ரீச்சர் நீண்ட காலம் திருகோணமலையிலும் கொழும்பிலும் வாழ்ந்தவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.