பக்கங்கள்

26 ஏப்ரல் 2016

துருக்கியில் இறந்த இளைஞனின் தாயும் அதிர்ச்சியில் மரணம்!

கள்ள வழியால் சுவிற்ஸர்லாந்த் செல்வதற்காக சென்று கடத்தல்காரர்களிடம் அகப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு இறந்த முல்லைத்தீவு வட்டுவாகலைச் சேர்ந்த காண்டீபனின் தாயாரும் மகன் இறந்த காரணத்தால் இன்று அதிர்ச்சியுற்று மரணமாகியுள்ளார்.நாகராசா புவனேஸ்வரி 65 வயது என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். மகன் இறந்ததை அறிந்து தாயார் மரணமான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் தாய், மகனின் பாசம் நெகிழ வைப்பதாக அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். தற்போது காண்டீபனின் சடலத்தை இலங்கைக்குக் கொண்டு வருவதற்காக உறவினர்கள் துருக்கித் துாதரகத்தில் காத்திருப்பதாக தெரியவருகின்றது.

நன்றி.NEW JAFFNA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.