பக்கங்கள்

26 ஏப்ரல் 2012

2006 யுத்த காலத்தில் காணாமல் போனோர் குறித்து விசாரணை!

கடந்த 2006 ஆம் ஆண்டு யுத்த காலப் பகுதிகளில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் அவர்களது மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளும் பொருட்டு இரண்டாம் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் இந்த தகவலை தெரிவித்தார்..
இது குறித்து அவர் விபரிக்கையில் : 2006, 2007, 2008 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அந்தக் காலகட்டத்தில், காணாமற் போனவர்களது உறவினர்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதில் 2007, 2008, 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பில் எம்மிடம் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்து இவர்களின் உறவினர்களை அழைத்து இரண்டாம் கட்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்தோம்..
2006 ஆம் ஆண்டு காணாமல் போனவர்கள் தொடர்பில் தற்போதே அடுத்தகட்ட விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றோம். முறைப்பாடுகளில் இருக்கின்ற ஆவணக் குறைபாடுகளைச் சீர்செய்வதுடன், காவல்துறை முறைப்பாடு தொடர்பிலும் ஆவணங்களைப் பெற்று வருகின்றோம்.
இந்த விசாரணைகள் ஒரு வார காலத்துக்கு எமது அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளன. இதன் பின்னர் கொழும்பிலிருந்து எமது தலைமையகத்தால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.