பக்கங்கள்

21 ஏப்ரல் 2012

ஜெயலலிதா,கருணாநிதி போன்றோரால் எம்மை அசைக்க முடியாது!

mervin muderஇலங்கை வந்துள்ள இந்தியக் குழுவாலோ அல்லது இந்திய தேசத்தில் இருக்கின்ற கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரினாலேயோ இலங்கை அரசை அசைக்க முடியாது. நம்மை அசைப்பதற்கு அவர்களுக்குத் தகுதி இல்லை. நாம் கொண்ட கொள்கையில் உறுதியுடன் நிற்கின்றோம். இவ்வாறு தெரிவித்துள்ளார் மேர்வின் சில்வா.இலங்கை வந்துள்ள இந்தியக் குழு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களின் விருப்பத்தின்படிதான் தீர்வைக் கொடுக்கும் அரசு. ஏனெனில், இந்த நாட்டில் சிங்கள மக்களே பெரும்பான்மை இனத்தவர்.

அவர்களின் விருப்பத்துக்கு அமைவாகவே சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கப்படும். இதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
இந்தியாவுக்கு அடிபணிந்து நாம் செயற்படமாட்டோம். கருணாநிதி ஐயாவும், ஜெயலலிதா அம்மையாரும் பாடும் பாடல்களுக்கு நாம் ஆடமாட்டோம். எம்மை இந்திய தேசத்தால் அசைக்க முடியாது.
இலங்கை வந்துள்ள இந்தியக் குழு இங்குள்ள மக்களை பார்வையிட்டு போகலாம். ஆனால், தீர்வை உடன் வழங்குமாறு எம்மை நிர்ப்பந்திக்க முடியாது” என்று கூறினார் அமைச்சர் மேர்வின் சில்வா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.