பக்கங்கள்

14 ஜூலை 2020

ஊர்காவற்றுறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் திடீர் மரணம்!

ஊர்காவற்றுறை பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் அரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஊர்காவற்றுறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாடகக் கலைஞரான காவலூர் செல்வம் என்று அறியப்படும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச சபை உறுப்பினர் கனகசுந்தரம் ஜெயக்குமார் என்பவரே உயிரிழந்தவராவார். இன்று இலங்கை தமிழ் அரசு கட்சியினர் ஊர்காவற்றுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுவீடாக பிரச்சார பணியில் ஈடுபட்டனர். இதன்போது பிரதேச சபை உறுப்பினர் ஜெயக்குமாருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனடியாக ஊர்காவற்றுறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.