பக்கங்கள்

12 ஜூலை 2020

புளியங்கூடல் சக்களாப்பதி அருள்மிகு கதிர்காமக் கந்தன்!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், பலர் மேடையில் உள்ளனர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம்ஊர்காவற்றுறை / புளியங்கூடல் சக்களாப்பதி அருள்மிகு கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் கும்பாபிஷேகத் திருவிழா 2020 ஆண்டி, ஆடி மாதம் 9ஆம. 10ஆம், 11ஆம் திகதிகளில் சிறப்பாக நடந்தேறியது. பக்தர்களும் பலர் இந்த அருள்மிகுந்த பெருவிழாவில் கலந்துகொண்டு சக்களாப்பதி கதிர்காமக் கந்தனின் அருள்பெற்று சென்றனர். அதன் சில புகைப்படங்கள், பக்தகோடிகள், புலம்பெயர்ந்து வாழும் சக்களாப்பதி கதிர்காமக் கந்தன் பக்தர்களின் பார்வைக்காக பதிவிடுகின்றோம். இந்தப் பெருவிழா 12.07.2020 முதல் 11 தினங்களுக்கு நடைபெறும்.எம்பெருமான், எம்மை வாழவைக்கும் புளியங்கூடல் சக்களாப்பதி கதிர்காமக் கந்தனினுக்கு மண்டலா அபிஷேகமும் நடைபெற உள்ளது. சக்களாப்பதி கதிர்காமக் கந்தனின் பக்தகோடிகளே!! அருள்மிகுந்த சக்களாப்பதி கந்தன் காலடியில் குறைகளை சமர்பித்து, கதிர்காமக் கந்தன் கருணைபெற்று நிறைவோடு வாழ்ந்திடுவோம். எங்கள் மனப்பாரம் தீரட்டும், நோய் நொடி மறையட்டும், கஸ்டங்கள் கரையட்டும், கந்தன் கருணை கொண்டு நம்வாழ்வு சீர்பெற்று மிளிரட்டும். சக்களாப்பதி கதிர்காமக் கந்தன் அருள் எங்கள் சிரம்காத்து நிற்கட்டும். எங்கள் புளியங்கூடல் சக்களாப்பதி கதிர்காமக் கந்தன் மனங்குளிர மண்டலாபிஷேகத்தை சிறப்புடனே நிறைவேற்றுவோம் பக்தகோடிகளே!! புளியங்கூடல் சக்களாப்பதி கதிர்காமக் கந்தன் கருணைபெற்று, கந்தன் காலடி வணங்கி அருள்பெற வருகைதரும் பக்தகோடிகளின் பசியினை போக்க ஓர் சில பக்கதர்கள் இணைந்து கதிர்காமக் கந்தன் ஆலயப்பகுதியில் அன்னதானமும் வழங்க எண்ணியுள்ளார்கள் என்பதையும் தெரிவித்து மகிழ்கின்றோம்.
(ஆலய நிர்வாகத்தினர்)

செய்தி அனுப்பிய அன்பருக்கு நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.