பக்கங்கள்

03 ஜூலை 2020

சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகம்!




தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர், எம்.ஏ.சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகமாகும் என்று, முன்னாள் மூத்த போராளி  காக்கா எனப்படும், மு.மனோகரன் தெரிவித்துள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர், எம்.ஏ.சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகமாகும் என்று, முன்னாள் மூத்த போராளி காக்கா எனப்படும், மு.மனோகரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சுதந்திரம் என்றும் கூறிய முன்னாள் மூத்த போராளி பசீர் காக்கா, மாவீரர்களின் பெற்றோர்கள், எம்மை வழிநடத்திய தலைவர் பிரபாகரனை இன்றும் நேசிக்கும் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.