பக்கங்கள்

06 டிசம்பர் 2019

நடராசா சிறிரஞ்சனின் யாழ்ப்பாணத் தமிழ் அகராதி வெளியீட்டு விழா!

புளியங்கூடல் மண்ணின் மறைந்த மதிப்பிற்குரிய நடராசா ஆசிரியர் அவர்களின் புதல்வர் பெருமைக்குரிய நடராசா சிறிரஞ்சன் அவர்களின் யாழ்ப்பாணத் தமிழ் அகராதி நூல் வெளியீட்டு விழா 11.12.2019 புதன்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் கைலாசபதி கலையரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி எனும் முகவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகி அதைத் தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்தும் இடம்பெறும்.

வரவேற்புரை:
த.மயூரநாதன் அவர்கள்

ஆசியுரை:
பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்கள்

வாழ்த்துரை:பேராசிரியர் ஏ.என்.கிருஷ்ணவேணி அவர்கள்

தலைமையுரை:பேராசிரியர் சுபத்தினி ரமேஸ் அவர்கள்

பிரதம விருந்தினர் உரை:கலாநிதி சி.பத்மநாதன் அவர்கள்

தொடர்ந்து அகராதி வெளியீடும் சிறப்பு விருந்தினர்களின் உரையுடன் வெளியீட்டாளர் உரையும் இடம்பெறும்.ஏற்புரையை நடராசா சிறிரஞ்சன் நிகழ்த்துவார்.இவ்விழா சிறப்புற புளியங்கூடல்.கொம் குழுமம் வாழ்த்தி மகிழ்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.