பக்கங்கள்

15 நவம்பர் 2019

ஜெர்மனியில் போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளான தமிழர் விடுதலை!

ஜெர்மனியில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவரை ஜெர்மன் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.தமது தடுப்பு காவலில் இருந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினரை சுட்டு படுகொலை செய்தார் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான சிவதீபன் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது. 2009 யுத்தம் முடிந்த சமயத்தில் ஜெர்மனிக்கு சென்றிருந்த இவரை ஜெர்மன் காவல்துறையினர் கைது செய்தனர். முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 சிங்களப் படையினரை சுட்டுக்கொன்று தீ மூட்டியதாக குற்றம்சாட்டி டயல்டோர்ஃப் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடந்து வந்தன. இந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லாததால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.