பக்கங்கள்

26 ஜூலை 2016

பிரான்சில் மதகுருவும் ஜெர்மனியில் மருத்துவரும் படுகொலை!

வடக்கு பிரான்ஸில் தேவாலயம் ஒன்றில் பூசை நடந்துகொண்டிருந்த போது நுழைந்த இரு ஆயுதபாணிகள் ஆட்களை பணயமாக பிடித்து வைத்த சம்பவத்தில் எண்பத்து நான்கு வயதான கிறிஸ்தவ மதகுரு ஒருவர் கொல்லப்பட்டார்.இன்னுமொருவர் உயிருக்காக போராடுகிறார். இரு தாக்குதலாளிகளையும் போலிஸார் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகின்றது. கடந்த இரு வாரங்களில் 84 பேர் கொல்லப்பட்ட நிலையில் மிகவும் அதிகபட்ச உசார் நிலையில் இருக்கும் பிரான்ஸில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதே வேளை ஜேர்மனியில் உள்ள பெஞ்சமின் பிரான்க்லின் வைத்தியசாலையில் நோயாளி ஒருவர் வைத்தியரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானார். ஜேர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஸ்டெக்லிட்ஸ் மாவட்டத்தில் உள்ளது பெஞ்சமின் பிரான்க்லின் பல்கலைக்கழக வைத்தியசாலையில் இன்று காலை 11 மணிக்கு நோயாளி ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வைத்தியரை சுட்டுள்ளார்.இதில் படுகாயம் அடைந்த வைத்தியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 2 மணிநேரம் கழித்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதற்கிடையே வைத்தியரை சுட்ட அந்த நோயாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.குறித்த சம்பவத்தால் வைத்தியசாலை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கும், தீவிரவாதத்திற்கும் தொடர்பு இல்லை எனவும்,வைத்தியசாலை வளாகத்தில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் வைத்தியசாலையில் இருந்த வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.