பக்கங்கள்

09 ஜனவரி 2016

ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையை வடக்கு முதல்வர் சந்தித்தார்!

வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் அவர்களை மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்தார். மன்னார் எருக்கலம்பிட்டி பாடசாலையில் தொழிநுட்ப பீடத்தை திறந்து வைத்த பின் ஆயர் இல்லம் சென்ற வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆயரை சந்தித்து சுகம் விசாரித்தார். இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் ஆயர் மிக விரைவில் குணமடைவார். அதன் பின் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முன்வருவார், இதற்கு இறைவன் அருள் புரிவார் என்கின்ற நம்பிக்கை எனக்குண்டு என்றார்.சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டிருந்த இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் அண்மையில் நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.