பக்கங்கள்

24 ஜனவரி 2016

மகா காவியம் படைக்கப்போகிறாராம் வைரமுத்து!!!

கிளிநொச்சியில் வைரமுத்து
ஈழ மண்ணின் வீர தியாக வாழ்வியலை - சரித்திரம் பெறும் கதைகளை - மகா காவியம் ஆக்குவதே என்னுடைய வாழ்நாள் திட்டம் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற உழவர் பெருவிழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மண்ணை நான் தொட்டு வணங்குகிறேன். இந்த மண்ணைத் தொழுகின்றபோது எனக்கு என்ன உணர்வு வந்ததென்று ஆயிரம் சொற்களால் எழுதிவிடமுடியாது. முதன்முதலில் மண்ணில் விழும் மழைத்துளிக்கு ஒரு சிலிர்ப்பு வரும், மண்ணுக்கு ஒரு உயிர்ப்பு வரும். முதல் முத்தம் பெறும்போது உயிருக்குள் பூப்பூக்கும். குழந்தைக்கு முதலில் இரத்தம் சொட்டும்போது தாயின் இதயம் துடிக்கும் துடிப்பு போன்றே இந்த மண்ணை நான் தொட்டபோது உணர்ந்தேன். தமிழனின் விவசாய அறிவு மற்றும் மரபு தொழில் நுட்பங்கள் எல்லாம் மறைக்கப்பட்டமைக்குக் காரணம் வேறு நாட்டவரின் நுட்பங்களை திணிக்கப்பதற்காகவே புகுத்தப்பட்டன. யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, கிளிநொச்சி வவுனியா, போன்ற ஊர்களின் பெயர்கள் எல்லாம் வெறும் பெயர்கள் அல்ல. அவை சரித்திரத்தில் இடம் பெறும் குறிப்புக்களாகவே இந்த உலகம் உணர்ந்திருக்கிறது.இவ்வாறு தமிழகத்தில் இருந்து அழைக்கப்பட்டிருந்த வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த பேரவலத்திற்கு கருணாநிதியும் துணை போனவர் என்பதையும்,தமிழர்களை திசை திருப்ப கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாடு எனும் நாடகத்தில் முக்கிய பங்காற்றியவர் வைரமுத்து என்பதையும் தமிழ் மக்கள் இலகுவில் மறந்து விடமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.