பக்கங்கள்

23 ஏப்ரல் 2015

கனடியத் தமிழர்களின் நண்பன் பற்றிக் பிரவுண்!

கனடியத் தமிழர்களின் உண்மையான நண்பனாக திகழ்கிற ஒரு அரசியற் தலைவர் பற்றிக் பிரவுண் என்று கனடிய ஆங்கிலப் பத்திரிகையொன்று மக்களைப் பேட்டி கண்டு எழுதியுள்ளது. கடந்த வாரம் மார்க்கம் நகரில் இடம்பெற்ற சமூக விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மேற்படி நிருபர் 36 வயதான திரு. பற்றிக் பிரவுணை சூழ்ந்து கொண்ட கோட்-சூட் அணிந்த தமிழ் ஆண்களும், சேலை அணிந்த தமிழ் பெண்களுமாக பலர் திரு. பற்றிக் அவர்களோடு மிக அன்னியோன்யமாகப் பழகியதா குறிப்பிட்டுள்ளார். சிலர் அவரை “ஹேய் பற்றிக்” என உரிமையோடு அழைத்தனர். வேறு சிலரோ அவரைத் தோளில் தழுவி நீர் எங்களில் ஒருவன் என உரிமை பாராட்டிச் சென்றனர், வேறு சிலரோ மிகவும் மரியாதையோடு கைலாகு கொடுத்துச சென்றனர் எனத் தெரிவித்த பத்திரிகையாளர், யாருமே திரு பற்றிக்கை அணுக சம்பிரதாயங்களைப் பார்க்கவில்லை, தங்களது பக்கத்து வீட்டுப் பையன் போல அவ்வளவு உரிமையோடு பழகினார்கள். அவருடன் தங்களின் விடயங்களை இலகுவாகப் பகிர்ந்து கொண்டனர் எனவும்,குறிப்பிட்டுள்ளார். அந்த விழாவில் கலந்து கொண்ட சாந்தா பஞ்சலிங்கம் என்பவர் “பற்றிக் தமிழர்களது நண்பன்” , “எங்களது இன்ப, துன்பமோ எந்த நிகழ்வென்றாலும் பற்றிக் எங்களுடன் நிற்பார்” எனப் பெருமிதமாகச் சொன்னார். ஒரு பல் வைத்தியரும், அவரது குடும்பமும் பற்றிக்குடன் படம் எடுத்துக் கொண்டார்கள். அந்த வைத்தியரின் மகனான சிறுவன் பற்றிக்கோடு மிகவும் உரிமையோடு பழகினான். பற்றிக்கை தெரிந்ததையிட்டு மிகவும் பெருமைப்படுகின்றேன் எனத் தெரிவித்த பொறியியலாளரான மூர்த்தி நாராயணன் பற்றிக் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயற்படுவதற்கு அவர் மரதன் வீரராய் இருப்பதுகூடக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்தார். இவ்வாறு தமிழர்களிற்கும் திரு.பற்றிக் பிரவுனிற்குமான உறவை மேற்படி ஆங்கிலப் பத்திரிகை சிலாகித்துள்ள அதேவேளை, திரு.பற்றிக் பிரவுண் இந்து ஆலயமொன்றிற்கு சென்று அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதோடு அங்கிருந்த மக்களுடன் இணைந்து உணவருந்திச் சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.