பக்கங்கள்

17 ஏப்ரல் 2015

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்!

தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் 27.11.1965 ஆம் ஆண்டு பிறந்தவர் . முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத் தொடுவாயைச் சேர்ந்தவர். 1984 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளபட்ட பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். பல வெற்றித்தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர்.தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படையாக வந்த இந்தியப்படைக்கு சிம்மசொப்பனமாக செயற்பட்டவர். இவரது நினைவுகளை சுமந்து அவரது வீர வரலாறுகளோடு வெளியீடுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம் , தமிழீழ விடுதலை புலிகளால் வெளியீடப்பட்ட நூல் "சமர்க்கள நாயகன்" அதனை தமிழகத்தில் இராவணன் பதிப்பம் தற்போது வெளியீட்டு வருகிறது. இதன் முதல் நூல் வெளியீட்டு விழா புதுச்சேரியில் பெரியார் திடலில் 13.12.2014 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அணைத்து மாணவர்கள் இளைஞர்கள் இயக்கங்கள் இணைந்து நடத்தும் பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன் நூல் அறிமுக விழா 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை லயோலா கல்லூரி, பி.எட்.அரங்கத்தில் மதியம் 2 மணியளவில் நடை பெற உள்ளது. இவ் விழாவிற்கு அனைத்து தமிழ் உறவுகளையும் வருமாறு அழைக்கின்றனர். தொடர்புக்கு: 9600031771, 9884495527, 9940121655.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.