பக்கங்கள்

03 அக்டோபர் 2020

புங்குடுதீவில் பூசகர் கொலை சைவ மகாசபை கண்டனம்!

புங்குடுதீவு பாணாவிடை சிவன் கோவில் (ஈழத்து இராமேசுவரம் ) குரு ரூபன் சர்மா ஐயாவினுடைய கொலையை சைவ மகா சபை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. கொலையாளிகள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். பின்புலம் முழுமையாக ஆராயப்பட்டு உண்மைகள் வெளிக் கொணரப்பட வேண்டும். மனிதத்தற்கும் ஜிவகாருண்யத்திற்கும் போராடி உயிர்துறந்த தாய் மதத்தில் அளவு கடந்த பற்றுறுதி உடைய வணக்கத்துக்கும் போற்றத்துக்குரிய குருவிற்கு ஆத்மார்த்த அஞ்சலிகள் . இறை சிவனின் பாதார விந்தங்களில் ஆத்ம சாந்தி பெறுங்கள். நிச்சயம் உங்கள் நல்ல எண்ணங்கள் இவ்வுலகில் நிலைத்து நிற்கும் ஐயா.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல் பரா.நந்தகுமார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.