பக்கங்கள்

17 மே 2020

முள்ளிவாய்க்காலில் கெடுபிடியை தொடங்கியது அரசபடை!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அருகே, புதிதாக பொலிஸ்,படையினரின் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியில், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு செல்லும் வீதியின் ஆரம்பத்தில்,பொலிஸ் சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடியில் கடந்த மூன்று நாட்களாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு அண்மையாகவுள்ள ஆட்களில்லாத வீடு ஒன்றில் புலனாய்வாளர்கள் தங்கியிருந்து கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு வருபவர்களை இவர்கள் கண்காணிப்பதுடன், ஒளிப்படம் எடுத்து, அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். அத்துடன், முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் தொடக்கமான, இரட்டைவாய்க்கால் பகுதியிலும், படையினரின் சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைச் சாவடியில் உள்ள படையினர், வீதியால் செல்பவர்களை பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், வட்டுவாகல் பாலத்துக்கு முன்பாக வழமைக்கு மாறாக அளவுக்கதிகமான படையினர் நிறுத்தப்பட்டு சோதனை சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை, முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலையை நினைவு கூரும், நினைவேந்தல் நிகழ்வு கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் என நினைவேந்தல் குழு அறிவித்துள்ள நிலையில்,படைகள் மற்றும் பொலிஸ் கெடுபிடிகள் அப்பகுதியில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.