பக்கங்கள்

14 பிப்ரவரி 2020

இளம் மனைவியை கொன்று தோலை உரித்த கொடூரன்!

ஆத்திரம் அடங்காமல் சமையல் அறைக்கு ஓடிப்போய்,காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து மனைவியை குத்தி கொன்றதுடன், அவரது தோலையும் தனியாக உரித்தெடுத்துள்ளார் கொடூர, கொடுமைக்கார கணவர்! மெக்சிகோ நகரைச் சேர்ந்தவர் எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ.இவருக்கு வயது 46 ஆகிறது.. இவரது மனைவிக்கு வயது 25 ஆகிறது.. வயது பொருத்தம் இல்லாத காரணத்தினால் இருவருக்குள்ளும் நிறைய தகராறு வந்துள்ளது.அப்படி ஒரு சண்டை சம்பவத்தன்றும் நடந்தது.. அந்த நேரம் பார்த்து கணவன் செம போதையில் இருந்துள்ளார்.. தம்பதியிடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமும் போதையும் தலைக்கேறிய கணவன், நேராக சமையலறைக்கு போய் கத்தியை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக குத்திவிட்டார்... உடம்பில் பல இடங்களில் கத்திகுத்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே மனைவி இறந்துவிட்டார்... அப்போதும் ஆத்திரமும், போதையும், வெறியும் அடங்காத கணவன், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அவருடைய தலை முதல் கால் வரை தோலை உரித்து எடுத்துள்ளார்..பிறகு உடல் உறுப்புகளை தனித்தனியாக வெட்டி எடுத்து கொண்டு போய், ஒரு ஏரியில் வீசினார்... பிறகு வீட்டுக்கு வந்து கொலை செய்ததற்கான அடையாளங்களை அழித்துள்ளார். அதற்கு பிறகு முதல் மனைவிக்கு போன் செய்து தான் எப்படி எல்லாம் கொலை செய்தேன் என்பதை ஒன்றுவிடாமல் விளக்கி இருக்கிறார்.இதை போனில் கேட்டதற்கே முன்னாள் மனைவி அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்..இதற்கு பிறகுதான் போலீசார் விரைந்து சென்றனர்.. அப்போது மிச்சம் மீதி இருந்த உடல்பாகங்களை கைப்பற்றி இருக்கின்றனர். கணவனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு மெக்சிகோ நகரமே வெலவெலத்து காணப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், தோல் உரிக்கப்பட்ட நிலையில் இருந்த பெண்ணின் சடலம் போட்டோ எடுக்கப்பட்டுள்ளது.. அதை அந்நாட்டு ஊடகங்களும் பயன்படுத்தியிருந்தன.. இதற்கு மெக்சிகோவின் தேசிய மகளிர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.. இந்த போட்டோவை பார்த்து மக்களும் கொதிப்படைந்து உள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.