பக்கங்கள்

07 பிப்ரவரி 2020

தமிழீழக் கலைஞர் முல்லை ஜேசுதாசன் காலமானார்!

ஈழத்து நடிகரும் குறும் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான முல்லை ஜேசுதாசன் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் சாவடைந்துள்ளார். 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய அபார நடிப்பு திறமைகள் மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தி பலராலும் போற்றப்பட்டு வந்தவர் அவர். ஒரு சிறந்த மனிதனாகவும் தனது திறமையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டு வந்தவரும் நடிகரும் குறும் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான முல்லை ஜேசுதாசன் இன்று அதிகாலை கள்ளப்பாட்டில் உள்ள அவரது இல்லத்தில் சாவடைந்தார்.கள்ளப்பாடு தெற்கு முல்லைத்தீவில் வசித்து வந்த சந்தியோகு ஜேசுதாசன்17.08.1955 ல் பிறந்தார். அவருடைய 65 ஆவது வயதில் இன்று காலை அவர் சாவடைந்தார்.தமிழீழக் கலைஞர் முல்லை ஜேசுதாசன் அவர்களின் புகழுடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.