பக்கங்கள்

24 நவம்பர் 2017

தமிழர்களின் சனத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும்!


தேசியக் கொடியை தாம் அவமதிக்கவில்லை என்று, வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய மக்கள் தொகைப் பெருக்க விகிதத்தில் சராசரியை விட மிகக்கீழ் மட்டத்திலேயே தமிழ் மக்களின் சனத்தொகைப் பெருக்கம் அமைந்துள்ளது.இந்தநிலை மாற வேண்டும். எங்களுடைய சனத் தொகைப் பெருக்கம் அதிகரிக்கப்பட வேண்டும் என,வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா பாடசாலையின் மாலதி சுப்பிரமணியம் அரங்கில் பாடசாலை அதிபர் பே.தனபாலசிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் 1, 007 பாடசாலைகள் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த 1, 007 பாடசாலைகளிலும் 120 பாடசாலைகளில் 20 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். யாழ்.மாவட்டத்திலும் கூட 20 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் காணப்படுகின்றன.வன்னிப் பகுதியில் இதன் எண்ணிக்கை அதிகமானதாகவுள்ளன. வடமாகாணப் பாடசாலைகளில் மிகப் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதற்குக் கடந்த காலயுத்தமே வழி வகுத்துள்ளது. யுத்தம் சுமார் நான்கு இலட்சம் மக்களைக் கொன்றொழித்துள்ளது. இவ்வாறு கொன்றொழிக்கப்பட்ட மற்றும் யுத்தம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய மக்களில் சுமார்- 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட வயதெல்லையைக் கொண்ட மக்களின் தொகையே மிக அதிகம். இந்த வயதெல்லையே பிறப்பினைஉருவாக்கக் கூடிய வயதெல்லையாகும். ஆகவே, கடந்த-30 ஆண்டுகளில் ஏறக்குறைய இரண்டு தலைமுறைப் பிள்ளைகளை நாங்கள் இழந்திருக்கின்றோம். பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களின் வீழ்ச்சிக்கு இதுவே முக்கிய காரணம். இலங்கையில் தற்போது சனத் தொகைப் பெருக்க விகிதத்தை இன அடிப்படையில் நோக்கினால் 1, 000 பேருக்கு 8.5 முஸ்லீம்களும் , 1, 000 பேருக்கு 5.7 சிங்களவர்களும், 1, 000 பேருக்கு 1.5 என்ற அடிப்படையில் தமிழ் மக்களும் காணப்படுகிறார்கள். ஆகவே, இலங்கையின் தேசிய மக்கள் தொகைப் பெருக்க விகிதத்தில் சராசரியை விட மிகக்கீழ் மட்டத்திலேயே தமிழ் மக்களின் சனத்தொகைப் பெருக்கம் அமைந்துள்ளது.இந்தநிலை மாற வேண்டும். எங்களுடைய சனத் தொகைப் பெருக்கம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.