பக்கங்கள்

06 ஜூன் 2017

தம்பாட்டியில் ஐவர் கைது!

பாடசாலை மாணவர்கள் மூவரை தகாத உறவுக்குட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் தம்பாட்டி பகுதியைச் சேர்ந்த 5 பேரை ஊர்காவற்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 ல் கல்வி பயிலும் மாணவர்கள் மூவரை 8 நபர்கள் அப்பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி தகாத உறவுக்குட்படுத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களும் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து  பொலிஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றபோது 3 நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். ஏனைய ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட 3 மாணவர்களும் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.