பக்கங்கள்

27 ஜூன் 2017

புளியங்கூடல் அம்பாள் ஆலய மின் ஒளியால் பதற்றமான குடாநாடு!

பறக்கும் தட்டு பறப்பதாக நேற்றிரவு பரவிய வதந்தியால், யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், வீதியில் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். புளியங்கூடல் அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் நேற்றிரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது பயன்படுத்திய பெரிய மின் விளக்குகள் வானை நோக்கி செலுத்திய ஒளி, திரண்ட முகில் கூட்டங்கள் மீது பட்டு அவை பாரிய ஒளிவட்டங்களாக தென்பட்டன. இதனைச் சிலர் பறக்கும் தட்டு என்று வதந்தியைக் கிளப்பி விட்டனர். இந்த செய்தி 3 மணித்தியாலங்களாக குடாநாடெங்கும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வீதிக்கு வந்து மக்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எனினும், அந்த ஒளிவட்டத்திற்கான காரணம் தெரியவர மக்கள் பதற்றம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.