பக்கங்கள்

25 மே 2017

மெலிஞ்சிமுனை சுற்றிவளைப்பில் சிலர் கைது!

ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதியில் பொலிஸார் நேற்று திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு சிலரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஈபிடிபி முன்னாள் உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிறுவன் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பதற்றநிலை உருவாகியிருந்தது. இந்நிலையில், குறித்த பகுதியில் வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்ட நபர்களை கைது செய்யுமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பலரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பகுதியில் இடம்பெற்ற பதற்ற நிலையை அடுத்து தாக்குதலுக்கு இலக்காகியிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.