பக்கங்கள்

18 மார்ச் 2016

பொட்டம்மான் குறித்து எதுவும் தெரியாது என்கிறார் சரத்பொன்சேகா!

சரத்பொன்சேகா
இறுதி யுத்தம் நடந்த சமயம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோர் சிலருடன் தப்ப முயன்றனர். 2009 மே 17 ஆம் திகதி வடக்கு நந்திக்கடலூடாகத் தப்ப முயன்ற இவர்களில் பிரபாகரனும் மற்றவர்களும் திரும்பி யுத்த களத்துக்கு வந்தனர். ஆனால் பொட்டு அம்மான் வரவில்லை. இந்த விடயத்தை கே.பி. கூறியே தெரிந்து கொண்டோம். பொட்டு அம்மான் குறித்து என்னிடம் உள்ள இறுதித் தகவல் இதுவே. - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான 'பீல்ட் மார்ஷல்' சரத் பொன்சேகா கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று அவர் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். இதன்போது "பொட்டு அம்மான் இந்தியாவில் உயிருடன் இருக்கிறார் என செய்திகள் வெளியாகி உள்ளனவே" என எழுப்பிய வினாவுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்ட தகவலை தெரிவித்தார். மேலும் இந்தியாவில் பொட்டு அம்மான் இருக்க முடியாது. காரணம் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அவர் தேடப்படுபவர். வட கிழக்கு நந்திக்கடல் தாக்குதலில் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி உட்பட பலர் கொல்லப்பட்டனர். இதன்பின்னரே பிரபாகரனும், பொட்டு அம்மானும் தப்பிக்க முயன்றனர். பிரபாகரன் மீண்டும் யுத்த களத்துக்கு வந்தபோதும் பொட்டு வரவில்லை. அவருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது.அவர் உயிரிழந்திருக்கலாம்.இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.