பக்கங்கள்

16 பிப்ரவரி 2015

புலிகளின் சொத்துக்கள் எவையும் என்னிடம் இல்லை-கே.பி.

புலிகளின் நிதியோ,கப்பல்களோ அல்லது வேறு சொத்துக்களோ கைது செய்யப்பட்டபோது என்னிடம் இருக்கவில்லை. 2002 ஆம் ஆண்டில் இருந்து புலிகள் அமைப்புடனான தொடர்புகளுடன் இருந்து நான் ஒதுங்கியே வாழ்ந்து வந்தேன் என கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 40 பேரின் கடும் கண்காணிப்பின் கீழ் புனர்வாழ்வுக்கு ஒப்பான நிலையிலேயே கிளிநொச்சியில் தான் தங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் கே.பியைக் கைது செய்து புனர்வாழ்வு அளிக்க வேண்டும். அவரிடம் இருக்கும் புலிகளின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், கிளிநொச்சி செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தில் இருக்கும் கே.பியை தமிழ் பத்திரிகை ஒன்று தொடர்பு கொண்டு இது குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மலேசியாவில் வைத்து நான் கைது செய்யப்பட்டு 24 மணிநேர விசாரணைகளின் பின்னர் எயார் லங்கா விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டு இலங்கை அதிகாரிகளிடம் என்னை ஒப்படைத்தார்கள். அன்று முதல் பாதுகாப்புத் தரப்பினரின் தீவிர கண்காணிப்பின் கீழேயே வைக்கப்பட்டுள்ளேன் எனவும் அவர் கூறியுள்ளார். உங்கள் கட்டுப்பாட்டில் இருந்த விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான கப்பல்கள் அரசு வசமானதாகக் கூறப்படுவது பற்றி என்ன கூறுகிறீர்கள் எனக் கேட்டபோது, நான் வழங்கிய தகவல்களின் பிரகாரம் எனது பொறுப்பில் இருந்த கப்பல்கள் இலங்கையால் கைப்பற்றப்பட்டதகாக் கூறப்படும் தகவல்களிலும் உண்மை இல்லை. அது பொறுப்பில்லாமல் சந்தேகத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட தகவல்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்;. கைதான அல்லது சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பலர் புனர்வாழ்வுக்ககு உட்படுத்தப்பட்டபோதும், நீங்கள் அவ்வாறான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை எனக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்ட போது இந்தக் கேள்வியை முன்னைய அரசிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும் என கே.பி.தெரிவித்தார். நான் தற்போதும் கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டே வருகின்றேன். எனது குடும்ப உறுப்பினர்களைக் கூட சுதந்திரமாக சந்தித்துப் பேச முடியாத நிலையே உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்கள். உங்களிடம் பல பெயர்களில் பல நாடுகளின் கடவுச் சீட்டுக்கள் இருந்ததகாவும் கூறப்படுகிறதே அவை இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா? எனக் கேட்டபோது, எனக்கு கடவுச்சீட்டே இல்லை என அவர் பதிலளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.