பக்கங்கள்

26 ஜூன் 2021

தடைகளைத் தாண்டி இறுதிவரை மக்களுடன் இருப்போம்-கனகரத்தினம் சுகாஸ்!

இம்முறை #கொரோனா #நிவாரணப் #பணியை ஆரம்பித்து இன்றுடன் #ஒரு #மாதம் நிறைவடைகின்றது! கடந்த ஆண்டு 2020 கொரோனா நிவாரணப் பணி, 2020 பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்குப் பிறகு மீண்டும் ஒரு குறுகிய கால இடைவெளியில் இம்முறை எவ்வாறு கொரோனா நிவாரணப் பணியை மேற்கொள்வது? எமது பொருளாதாரம் அதற்கு இடங்கொடுக்குமா? உதவும் தமிழ்ச் சொந்தங்கள் மீண்டும் உதவுவார்களா? உதவ அவர்களுக்கு மனமிருந்தாலும் அவர்களின் பொருளாதாரம் அதற்கு இடங்கொடுக்குமா? என்ற பல அடுக்கடுக்கான கேள்விகளுடன், எப்படியென்றாலும் எமது மக்களோடு இறுதிவரை பயணிக்க வேண்டும் என்ற உந்துதலால் ஆரம்பித்த நிவாரணப் பணி இன்று #உங்கள் #அனைவரது #பேராதரவோடு ஒரு மாதத்தை நிறைவு செய்கின்றது என்பது #ஆச்சரியமான #உண்மை! உங்களின் ஆதரவின்றி நிச்சயமாக இது சாத்தியமாகியிருக்காது! பல சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் #கொடையாளர்கள், சேவை நோக்கோடு பணியாற்றும் #களப் #பணியாளர்கள், #சக #பணியாளர்கள் அனைவருக்கும் எமது சிரந்தாழ்த்திய நன்றிகள்! எத்தனை சவால்களைச் சந்தித்தாலும் இறுதிவரை மக்களுடன் இருப்போம் என்பதில் உறுதியாகவுள்ளோம்! பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்தாலும் இறுதிவரை எம்மவர்கள் வழிகாட்டிச் சென்ற #கஞ்சித் #தொட்டித் #திட்டத்தை நடைமுறைப்படுத்தி என்றாலும் #எம்மக்களோடு #தொடர்ந்து #பயணிப்போம்! “#நாங்கள் #சாப்பிடும்வரை #எமது #மக்களையும் #சாப்பிட #வைப்போம்” என்ற வாசகம் வெறும் உதட்டிலிருந்து பிறந்ததல்ல, அது உள்ளத்திலிருந்து பிறந்தது! ஆதரவளிக்கும் அனைவருக்கும் #கோடி #நன்றிகள்! தடைகளைத் தாண்டி #இறுதிவரை மக்களுடன் இருப்போம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.