பக்கங்கள்

08 மார்ச் 2021

மக்கள் நலனே முக்கியம் என்பதால் திருவொற்றியூரில் போட்டி​-சீமான்!

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன் என்று சீமான் விளக்கி உள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்காக தற்போது நாம் தமிழர் கட்சி டாப் கியரில் சென்று கொண்டு இருக்கிறது. திமுக, அதிமுக இன்னும் முழுமையாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிக்கவில்லை. ஆனால் நாம் தமிழர் கட்சியோ கூட்டணி பற்றியெல்லாம் யோசிக்காமல் துணிச்சலாக தேர்தலை தனியாக சந்திக்க உள்ளது. இதற்காக நேற்று நாம் தமிழர் கட்சி தங்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்தது. சட்டசபை தேர்தலுக்கான 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி நேற்று அறிவித்தது.ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்தார். ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. லோக்சபா தேர்தல் போலவே 50% பெண் வேட்பாளர்களை சட்டசபை தேர்தலிலும் களமிறக்குவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் நேற்று 50% பெண் வேட்பாளர்களை சீமான் அறிவித்தார்.234 வேட்பாளர்களில் 117 ஆண் வேட்பாளர்கள் ,117 பெண் வேட்பாளர்கள் நாம் தமிழர் சார்பாக சீமானால் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட போகிறேன் என்று சீமான் முன்பு கூறி இருந்தார்.இதனால் கொளத்தூர் தொகுதியில் சீமான் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் கொளத்தூர் தொகுதிக்கு பதிலாக திருவொற்றியூர் தொகுதியை சீமான் தேர்வு செய்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன் என்று சீமான் விளக்கி உள்ளார். அதில், கொளத்தூரில்தான் போட்டியிடலாம் என்று இருந்தேன்.ஆனால் மக்கள் நலன்தான் முக்கியம். ஒருவரை வீழ்த்துவது முக்கியம் இல்லை. ஒருவரை வீழ்த்துவதை விட மக்களுக்கு என்ன செய்கிறேன் என்பதே முக்கியம். இதனால் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடாமல் திருவொற்றியூர் தொகுதியை தேர்வு செய்து இருக்கிறேன், என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.