பக்கங்கள்

19 ஜூலை 2019

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அனந்தி சசிதரன் சந்திப்பு

வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்திற்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பிற்கு மாற்றாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வீ. விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, அனந்தி சசிதரன் மற்றும் பொ. ஐங்கரநேசன் ஆகியோர் தலைமையிலான கட்சி அல்லது அமைப்புக்களும் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கவுள்ளதாக பேசப்பட்டிருந்தது. இந்நிலையில் முதலமைச்சரின் புதிய மாற்று அணியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை இணைத்துக் கொள்ளக் கூடாது என்றும், அந்தக் கட்சியை இணைத்துக் கொண்டால் தாம் அந்தக் கூட்டுக்கு வரப்போவதில்லை எனவும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. இதனால் புதிய அணி அமைப்பது தொடர்பான பேச்சுக்கள் பெரும் இழுபறிகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலைமையிலையே சுயாட்சிக் கழகத்தின் அனந்தி சசிதரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் திடீரென நேற்று பேச்சுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய கூட்டு அமைப்பது தொடர்பான இந்தச் சந்திப்பானது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி தொடர்பில் அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் மாற்று அணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பேசப்பட்டிருக்கலாம் என இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.