பக்கங்கள்

15 ஏப்ரல் 2019

வேலணையில் தங்கியிருந்த கனடா பிரஜை விபத்தில் மரணம்!

பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கனடாவில் இருந்து வந்த ஒருவர், சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார். கனடா பிரஜாவுரிமை பெற்றவரான செல்லப்பா சுந்தரேஸ்வரன் (வயது 66) என்பவரே உயிரிழந்தவராவார்.குறித்த நபர் கடந்த மாதம் மனைவி பிள்ளைகளுடன் இலங்கை வந்து, வேலணையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 28 ஆம் திகதி விசுவமடுவில் உள்ள தனது காணியை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பும் வழியில் பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கால்வாய்க்குள் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் குறித்த நபர் காயமடைந்தார்.குறித்த விபத்தில் படுகாயமடைந்தவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு பூநகரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.