பக்கங்கள்

14 பிப்ரவரி 2019

கறுப்புப் பட்டியலில் சிறீலங்கா!

பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்,சிறீலங்காவை  கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம். பணமோசடி மற்றும் எதிர்ப்பு பயங்கரவாத நிதி கட்டமைப்பின் மூலோபாய குறைபாடுகளை கொண்ட 23 நாடுகளைக் கொண்ட கறுப்பு பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது.ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைப்பு
முறையை பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அபாயங்களிலிருந்து தடுக்கும் வகையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தங்களது குறைபாடுகளை விரைவாக சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இந்த 23 நாடுகளில் சிறீலங்காவும்  இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.