பக்கங்கள்

11 ஜனவரி 2019

செந்தமிழன் சீமான்,கயல்விழி மண இணையருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

Seeman blessed with male baby நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பா ஆகியுள்ளார். அவரது மனைவி கயல்விழிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியைதான் சீமான் திருமணம் செய்தார். கயல்விழி எம்ஏ பட்டம் பெற்றவர்.இவர்களது திருமணம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சீமான்-கயல்விழி திருமணத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்தான் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். எப்போதுமே தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்.அதனால் இவரது திருமணமும், தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழின் முதல் எழுத்தான 'அ' பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து தர, அதை வாங்கி சீமான் கயல்விழி கழுத்தில் கட்டினார். கல்யாணம் ஆகி 5 அண்டுகள் ஆன நிலையில் சீமான்-கயல்விழி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கயல்விழிக்கு பிரசவம் நடந்தது. தாயும் சேயும் நலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீமான் தந்தை ஆகியுள்ளதால், நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.